Friday, August 10, 2007

பதிவர் பட்டறை - காணாமல் போன எலிக்குட்டி

இந்த விவகாரத்தைப் பற்றி இனிமேல் எழுதக் கூடாது என்று தான் நினைத்திருந்தேன்.... ஆனால் இனியும் எழுதாமல் இருந்தால் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்ற பயத்தில் இப்போதே எழுதிவிடலாமே என்று..

சென்னை பதிவர் பட்டறை நிகழ்ந்த அன்று, கலந்துரையாடுபவர்களுக்கு வசதியாக முன்பக்கத்தில் ப்ரோஜக்டரில் போட்டுக் காட்ட என் மடிக் கணினியையும் கொடுத்திருந்தேன். திரும்பி அது என் கைக்கு வந்த போது, என் செல்ல எலிக்குட்டியை மட்டும் காணவில்லை.. டெல் கணினிகளில் மட்டும் இணைக்கக் கூடிய, USB முறைப்படி இணைக்கும் அந்த ஆப்டிகல் மவுஸை யாராச்சும் பார்த்தீங்களா?

கடைசியாக கிடைத்த தகவலின்படி, முதல் வரிசையில் அமர்ந்திருந்த எல்லாரும் அவரவர் பொருட்களைத் திரட்டிக் கொண்டு போன பிறகு, நம்மாட்களில் (பதிவர்களில்) யாரோ ஒருவர் தான் பத்திரமாக அதை எடுத்து வைத்ததாக சொல்லப்பட்டது..

யாராச்சும் பார்த்தீங்களா?

[பின்குறிப்பு: இந்த இடுகை மொத்தமும் என் சொந்தக் கருத்தே.. பதிவர் பட்டறை அமைப்பாளர்களுக்கும் இந்த இடுகையின் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..

டிஸ்கி 2: - அண்ணன் உண்மைத்தமிழனுக்காக.. - இந்த இடுகையின் மூலம் யாரையும் கோபிக்கவில்லை.. யாருடையது என்று தெரியாமல் பத்திரப்படுத்தி இருந்தால், என்னுடையது என்று விளக்கவே இந்த இடுகை.. ]

Tuesday, January 30, 2007

பெங்களூரு இன்னும் கொஞ்ச நாளில்







மெயிலில் வந்தது :)

Wednesday, January 24, 2007

அரசாங்கம் கவனிக்குமா? - 2

இங்கு பதிந்திருந்த பதிவில் எனக்கே புரியாத உள்குத்தொன்றை நண்பர் ஒருவர் கண்டுபிடித்துச் சொன்னதால், அந்தப் பதிவின் உண்மையான நோக்கம் அது இல்லை என்பதால், பதிவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

வேறு ஏதும் இங்கே போடும் வரை



இந்த வெட்டியானையைப் பாருங்க.. வாரேன்..





Wednesday, November 22, 2006

கோலம் போடுவது இப்படி..



திரு வைத்த புள்ளிக்கு இதோ கோலம்..

சகா திரு சரிபார்க்கக் காத்திருக்கிறது..

அப்பளம் சுடுவது எப்படி?

கடைக்குப் போகவும்

அம்பிகா, அணில், பாப்புலர், பிந்து போன்ற அப்பள பாக்கெட் எதையாவது வாங்கிக் கொள்ளவும்



பாக்கெட்டை ஜாக்கிரதையாகப் பிரிக்கவும்




வாணலியை எடுத்துக் கொள்ளவும்

வீட்டில் எண்ணெய் இருக்கிறதா என்று பார்க்கவும்.



இல்லை என்றால் மீண்டும் கடைக்குப் போய் வாங்கிவரவும்

அம்மாவிடம் சொல்லி, வாணலியில் எண்ணையைச் சுடவைத்துத் தரச் சொல்லவும்

எண்ணை சுட்டுவிட்டவுடன், அம்மாவை ஒவ்வொரு அப்பளமாக வாணலியில் போட்டு எடுத்துத் தரச் சொல்லவும்

நன்கு பொரித்து வந்தபின் எடுத்துவிடவும்

கிண்ணத்தில் வைத்து கீழே இரைக்காமல் சாப்பிடவும்



குறிப்பு: இந்தக் குறிப்புகளை பாலபாரதி போன்ற குழந்தைகள் ஆவலுடன் படிப்பதால், எண்ணை அடுப்பின் அருகில் சிறுவர்கள் தனியே நிற்பது தவறு என்ற அடிப்படையில் ஜாக்கிரதையாக எழுதப் பட்டுள்ளது.