மெயிலில் வந்தது :)
Tuesday, January 30, 2007
Wednesday, January 24, 2007
அரசாங்கம் கவனிக்குமா? - 2
இங்கு பதிந்திருந்த பதிவில் எனக்கே புரியாத உள்குத்தொன்றை நண்பர் ஒருவர் கண்டுபிடித்துச் சொன்னதால், அந்தப் பதிவின் உண்மையான நோக்கம் அது இல்லை என்பதால், பதிவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
வேறு ஏதும் இங்கே போடும் வரை
இந்த வெட்டியானையைப் பாருங்க.. வாரேன்..
Posted by பொன்ஸ்~~Poorna at 12:00 AM 12 comments
Labels: படம் போடுறேன், யானை, வெட்டி
Tuesday, January 23, 2007
முத்தமிழ்க் குழுமக் கொண்டாட்டங்கள்
முத்தமிழ் குழுமம் பற்றி நண்பர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். நண்பர் மஞ்சூர் ராசா, மற்றும் நம்பிக்கை குழுமத்தின் பாசிடிவ் ராமா, முதலியோர் இணைந்து நடத்தும் யுனித்தமிழ் கூகிள் குழுமம்.
பதிவெழுதத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே முத்தமிழ்க் குழுமத்தில் இணைய எனக்கும் அழைப்பு வந்தது. நண்பர் மஞ்சூர் ராசா புதுப் பதிவர்களை அவ்வப்போது பார்த்து இது போல் அழைப்பு அனுப்பி விடுகிறார். குழுமத்தில் சேர்ந்த புதிதில் அங்கே நடக்கும் விவாதங்களை வெறுமே படிப்பதோடு சரி. நமது ரசிகவ் ஞானியார், கீதா சாம்பசிவம், செல்வன், ஸ்ரீஷிவ், நாமக்கல்லார் எல்லாரும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த முத்தமிழ்க் குழுமத்தின் அமைதிப்படையிலேயே என்னுடைய முதல் மூன்று மாதம் கழிந்தது.
அப்புறம் நமது நண்பர் அசுரன் மற்றும் நண்பர் ராஜாவனஜ்ஜும் வந்து சேர்ந்த பின்னர் கொஞ்சம் விறுவிறுப்பான விவாதங்களுடன் பொறிபறந்து கொண்டிருந்தபோதும் முத்தமிழ்க் குழுமத்தில் நான் வெறும் அமைதிப்படை உறுப்பினர் தான். சில சிறுவர் கதைகளைத் தாண்டி எதுவும் எழுதவில்லை அங்கே.
ஆனால், முத்தமிழ்க் குழுமம் இந்த ஜனவரி 20ஆம் தேதியன்று தான் முதல் ஆண்டு முடிவைக் கொண்டாடுகிறது என்பது மிக மிக ஆச்சரியமான தகவல் எனக்கு. ஒரு வருடத்தில் எத்தனை உறுப்பினர்கள், மடல்கள், விவாதங்கள்!!! வியப்பு அகலும் முன்னரே அவர்களின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் நல்லதொரு அறிவிப்பாக வந்தது.
இதோ முத்தமிழின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் அறிவிப்பு:
* இந்தப் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் முத்தமிழ் குழுமத்தில் கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் முத்தமிழ் வலைப்பதிவிலும், நண்பர் செல்வனின் வலைப்பதிவிலும் தொடர்ந்து இடப்படுகிறது. இதன்மூலம் பல படைப்பாளர்களுக்கு வலைப்பதிவுகளின் அறிமுகமும் அவர்களின் படைப்புகள் பரவலாக அறியப்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது முக்கிய படைப்புகள் விக்கிப்பீடியாவிலும் இணைக்கப்படும்.
* ஆண்டுவிழாவை ஒட்டி, புதுமையான கட்டுரை , கவிதை மற்றும் சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகளுக்கு தலைப்பு எதுவும் கிடையாது, தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டைப்பற்றி இருந்தாலே போதுமானது; சொந்த அனுபவங்களையும் கூட எழுதலாம். 400 வார்த்தைகளுக்கு மிகாத படைப்புகள் படைப்புகள் முத்தமிழ் குழுமத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 10, 2007. படைப்புகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.
படைப்புகளை muththamiz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்
சிறந்த படைப்புகளுக்கு சிறப்பான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
* மிக மிக முக்கியமான அடுத்த அறிவிப்பு, தமிழ்நாட்டு நூலகங்களை மேம்படுத்துதல். அதாவது தமிழ்நாட்டிலுள்ள சில கிராம பள்ளிக்கூடங்களுக்கு நூலகங்கள் அமைத்து தரலாம் என முத்தமிழ்க் குழுமம் முடிவுசெய்துள்ளது. நண்பர் உமாநாத் (விழியன்) அவர்கள் பொறுப்பில் நடக்க இருக்கும் இந்த நல்ல காரியத்திற்கு புத்தகங்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
Citibank Account
Bangalore - Koramangala
A/c No. 5637000804 - Umanath
Ph numbers : 09886217301/ 09894110534 (Tn number)
Mailing Address
S.Umanath
Bluestar Infotech Limited
#7, 18th Main Road,
7th Block
Koramangala -
Bangalore - 560095
ஆக, போட்டிகள், பரிசுகள், கிராமப்புற பிள்ளைகளின் படிப்புக்கு உதவ ஒரு வாய்ப்பு... வாருங்கள் நாமும் சேர்ந்து முத்தமிழின் ஆண்டுவிழாவைக் கொண்டாடி சிறப்பாக்க உதவுவோம்..
முத்தமிழ்க் குழுமத்தின் முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களுடன், இந்த அறிவிப்பை வெளியிட அமைதிப்படை உறுப்பினரான எனக்கும் வாய்ப்பளித்தமைக்கும் என் நன்றிகள்.. இன்னும் பல பிறந்த நாள் கண்டு சிறக்கட்டும் முத்தமிழ்க் குழுமம்.
Posted by பொன்ஸ்~~Poorna at 1:53 AM 1 comments
Labels: விளம்பரம்
Monday, January 22, 2007
அரசாங்கம் கவனிக்க...
நண்பரின் ஆசை: பெண்களும் அர்ச்சகர் ஆக வேண்டும்
மற்றொரு நண்பரின் பதில்: பெண்கள் பூசாரியானால், அதே இடத்தில் தெய்வ பக்தி, இறைவனை நம்பாத வெறும் விருப்பம் மட்டும் இருக்கும் நபர் பூசாரி வேலையில் இருக்கும் நிலையில் பூஜை பகவானுக்கு நடக்குமா? அர்ச்சக அம்பாளை மட்டுமே விருப்பத்தால் வேலையாக ஏற்றவர் ஆறுகாலம் தாண்டியும் துதித்து பூஜை தொடர்வது தெய்வக் குத்தமாகிவிடாதா?:-)))
--------------------------
பரம்பொருள் அமர்ந்திருக்கும் கோயில்களில் பெண்கள் வேலை செய்தால், கண்டிப்பாக நிலை தவறி நடந்து கொள்வார்கள். உடன் வேலை செய்யும் ஆண்களையும், நிலை தவறி நடக்கச் செய்வார்கள் என்று நண்பர் சொல்வது எத்தனை உண்மை என்று அறிய, உடன் பணிபுரிய பெண்மோகினிகள் இல்லாமலேயே, செய்யும் தொழிலைத் தெய்வமாக எண்ணிக் கொண்டிருந்த ஆண் ஒருவரின் தொழில் பக்திக்குச் சான்று இங்கே
---------------------------
"இதே வழியில் பார்த்தால், மென்பொருளகங்களில், காவல் நிலையங்களில், கல்விக் கூடங்களில், அரசு அலுவலகங்களில், வங்கிகளில், எல்லா இடங்களிலும் ஆண்கள் அதிக நேரம் வேலை செய்வதற்கு ஒரே காரணம் வேலை மீதான பற்று கிடையாது; உடன்பணிபுரியும் எதிர்பாலினரின் மீதான பற்று மட்டுமே! ஆகவே, இந்த இடங்களில் இருந்தும் பெண்களை நீக்கிவிட்டால், எல்லாருக்குமே சராசரியாக வேலை நேரம் குறைந்து விடும்; வேலையும் ஒழுங்காக நடக்கும். " என்கிறார் நண்பர் ஒருவர்
கவனிக்குமா நமது அரசு?!!!!
Posted by பொன்ஸ்~~Poorna at 12:29 AM 212 comments
Labels: ஆண் பித்தளை