பாகச புதுவரவுகள் சிலரின் அனுபவங்கள்.. அனானிகளாக..
1.
பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு தொலைபேசி அழைப்பு...:
அனானி: பொன்ஸ், உங்க தலைய இப்பத் தான் பார்த்திட்டு வரேன். என்னைக் கூட அவர் தலன்னு கூப்பிடறாரே!
நான்: அதனால தாங்க அவரை நாங்க தலன்னு சொல்றோம்.. எல்லாரையும் தலன்னு சொல்லுறார் இல்ல.. வேற ஏதும் பெரிசா செய்து தலைவராகிட்டார்ன்னு நினைச்சீங்களா என்ன?
அனானி: ஙே!
2.
வீட்டில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் தல குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து கொள்கிறார்..
நண்பர்: யாரு? யாரு!?
நண்பரின் நண்பர்: இஞ்ச பாரு.. ரீவியில் தெரியறவர், உங்க பாலாண்ணே மாதிரியில்ல?
நண்பர்: அட! ஆமாம்.. பாலாண்ணனே தான்.. எடு எடு, போன் போடு.. பேசுவோம்..
ந.ந.(போன் செய்து கொண்டே): கூகிளில் என் பேர் போட்டு தேடிலாம்னு சொல்லுறார்.. அது என்ன எண்டு கேட்போம்.
ந.: அது இருக்கட்டும், முதல்ல, பாகச எண்டால் என்னவெண்டு கேளு..
ந.ந. வுக்கு அதற்குள் லைன் கிடைத்துவிட்டது.. முதலில் பெயர் ஊர் கேட்கும் நிலைய ஆட்கள் போன் எடுத்து, இவரின் விவரங்களைக் கேட்டார்கள். தன் பெயர், ஊர் சொல்லிவிட்டு, அடுத்து, என்ன கேள்வி என்னும்போது, ந.ந., முதல் நண்பரிடம் விவரம் கேட்டார்...
ந: 'பா.க.ச எண்டால் என்ன?' எண்டு கேளு!
ந.ந.: பா.க.ச எண்டால் என்ன?
நிலைய அதிகாரி: பாகசவா? அப்படீன்னா?
ந.ந (முதல் நண்பரிடம்): பாகசவா? அப்படி எண்டால் என்ன?
ந: பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம்.
நிலைய அதிகாரி: அப்படி எல்லாம் இங்க கேட்கக் கூடாது சார்.. அப்புறம் பண்ணுங்க..
போனை வைத்துவிட்டார்..
3.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், ஒரு வயதான அம்மையார் பாலாவுக்கு போன் போட்டு: நல்லா முழிக்கிறீங்க..சார்...
யெஸ்.பா: என்னது?
அம்மையார்: எந்தெந்த கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரியலைன்னு நல்லாவே புரியுது..
யெஸ்.பா: !@#!@#$
4.
திருநெல்வேலியில் மற்றொரு நிகழ்ச்சி:
அண்ணன் பாலபாரதியும், மற்றொரு நீண்ட நாள் உறுப்பினரான பாகசங்கத்தினரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
உறுப்பினர்: அண்ணே, சங்கத்தை நல்லா டெவலப் பண்ணனும்ணே.... தலைமைக் கழகத்துகிட்ட பேசிகிட்டிருக்கோம்..
யெஸ்.பா: அடப்பாவி!
அப்போது உறுப்பினரின் நண்பர் ஒருவர் வருகிறார். அவர் இந்த பேச்சு வார்த்தையைக் கேட்டு, 'அதென்ன சங்கம்?' என்கிறார்.
உறுப்பினர் சங்கக் கடமையை நினைத்து விளக்கம் கொடுத்ததும், புதியவர்:
'அண்ணே, நானும் இனிமே பா.மு.நா.பா.க.ச'
யெஸ்.பா: அடேய்.. என்னடா, இப்படித் திட்டுறே!
புதியவர்: இல்லண்ணே, நானும் பார்த்த முதல் நாளே பா.க.ச உறுப்பினராகிக்குறேன்னு சொன்னேண்ணே.. ஏதும் ஃபார்ம் இருந்தா கொடுங்கண்ணே.
டிஸ்கி:
1. மேற்குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகள் எதுவுமே பொய்யில்லை.. தரவு வேண்டுமெனில் ஒரு அரை மணி நேரம் பாலாவைப் பேச விட்டால் தெரிந்து விடும்.. இன்னும் இது போன்ற நிறைய கதைகளைத் தலையைப் பேச விட்டு உங்களுக்காக பதிவு செய்வதே என்னுடைய தலையாய பணி..
2. பாகசவின் புதிய உறுப்பினர்களான இவர்கள் அனைவரும் தற்போது தமிழ்வலைபதிவுகளில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் அனுமதியின்றி, அவர்கள் பெயரைப் பயன்படுத்தக்கூடாதென்று அனானியாக சொல்லி இருக்கிறேன். விருப்பமிருந்தால் யார் யார் என தானே குறிப்பிட்டு மகிழலாம் ;)
Monday, July 16, 2007
பாகச புதுவரவுகள்
Posted by பொன்ஸ்~~Poorna at 3:47 AM 7 comments
Labels: பாகச
Tuesday, July 10, 2007
அண்ணாச்சி சென்னை விஜயம்
எச்சரிக்கை: இது ஒரு கும்மிப் பதிவு
ஆசிப் அண்ணாச்சி சென்னை வந்ததை ஒட்டி எல்லாரும் பதிவு போட்டுக் கொண்டிருக்கையில், தாஸ் மற்றும் கவிஞர் வா.மவைத் தொடர்ந்து, இன்றைய அண்ணாச்சி பதிவாக மலர்கிறது இந்த இடுகை.
நேற்று மதியம் அண்ணாச்சியிடமிருந்து போன் வந்தது..
'அட! அண்ணாச்சி, உங்களுக்கு எப்படி இந்த நம்பர் தெரியும்?' - இது நான்
'ஆமாம், பெரிய ரகசியம், அடப் போங்க, சென்னை வந்து இறங்கியதுமே தல எல்லா நம்பரையும் அனுப்பிட்டாரில்ல.. அவர் கடைல வேலை ஏதாச்சும் பார்க்கிறாரா, இல்லை இப்படி நம்பர் அனுப்புறது தான் முழுநேரத் தொழிலான்னு சந்தேகமா இருக்கு!'
'அண்ணாச்சி, தலைமைக் கழகத்தைச் சேர்ந்த நாங்களே அடக்கமா இருக்கும், இப்படி துபாய் பாகசவிலிருந்து வந்து அநியாயத்துக்கு ஓட்டுறீங்களே!'
'தலைமைக் கழகத்தைப் பேசாம இடம் மாத்திரலாம்னு இருக்கோம். தலையை துபாய்க்கு கடத்திட்டம்னு வைங்க, அப்புறம் எங்க சிவ்ஸ்டார் ஆப்பக் கடை தான் தலைமைக் கழகம், நீங்க எல்லாம் கிளைக் கழகம் தானே?'
'என்னது துபாய்க்கு கடத்துறதா? அப்படி ஏதாச்சும் நடந்தா, நாங்க சென்னை பாகசவிலிருந்து ஏர்போர்ட் முன்னால காலவரையற்ற டீக்குடிக்கும் போராட்டம் நடத்துவோம், நினைவிருக்கட்டும்!'
'ஆமாமாம், நீங்க எல்லாம் டீ குடிக்கத் தொடங்கினதும், அதைப் பார்த்து நம்ம தலையும் டீ எங்கன்னு கேட்டுகிட்டு அந்தப் பக்கம் போயிடுவாரு.. கொஞ்சம் கஷ்டம் தான்..'
'சரி, இத்தனை தூரம் பக்கத்துல வந்துட்டீங்க, எப்ப சந்திக்கலாம்?'
'வீட்டுக்கு வாங்களேன் எல்லாரும்..'
***************
மாலை வழி கேட்டுக் கொண்டு நான், பாலா, லக்கி என்று பேரணியாக புறப்பட்டோம்.
'அண்ணாச்சி, முத்தாலம்மன்னு இங்க கோயிலே இல்லையாமே! முத்து மாரியம்மன் தான் இருக்காம்! '
'அடப்பாவி மக்கா.. நெசமாவே கெளம்பி வந்துட்டீங்களா?! இருங்க, கேட்டு சொல்லுதேன்.. அந்தக் கோயில் தானாம்!'
*************
பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு :
'அண்ணாச்சி, இங்க ட்ரான்ஸ்பார்மரே காணமே! ஜங்க்ஷன் பாக்ஸ் தானே இருக்கு!'
'அதான்லே துபாய்ல ட்ரான்ஸ்பார்மர்.. அப்படியே திரும்புங்கடே!'
ஒருவழியாக வீட்டுக்குப் போய் உட்கார்ந்தவுடன் அண்ணாச்சி சொன்னது: 'ஆச்சரியமா இருக்கு! என்னைக் கூட நாலுபேர் இவ்வளவு தூரம் தேடிகிட்டு வந்து பார்க்குறாங்கங்கிறதை நம்பவே முடியலை!'
'எங்களால கூட தான் நம்பவே முடியலை.. நீங்க வழி சொன்ன அழகுக்கு சரியான வீட்டுக்கு வந்திருக்கமே!'
__________________
அப்புறம்?
அப்புறமென்ன, இந்த இடுகை போலவே அரைமணி மொக்கை போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
இத்துடன் இன்றைய பாகச கடமை இனிதே நிறைவு பெறுகிறது.. மற்றவை நாளை
Posted by பொன்ஸ்~~Poorna at 10:29 PM 6 comments